தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஏபிசிவி சண்முகத்தை ஆதரித்து, கேரளவைச் சேர்ந்த காங்கிரஸ் பேச்சாளர் முஹம்மத் அலி பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும்,கேரளமாநில காங்கிரஸ் இளைஞரணி செயலாளர், அன்வர்மேத்தாவும் இப்பரப்புரையில் பங்கேற்றார். அப்போது அக்கட்சியினர் பிரசுரங்களை விநியோகித்தனர்.
இவர்கள் மலையாளத்தில் பேசுவைதை நமதூர் மக்கள் ரசித்து கேட்டு மகிழ்ந்தனர். மலையாள மொழியை அறிந் தவர்களும், தமிழோடு தொடர்புடையதாக இருப்பதால் எளிதாக புரிந்துக் கொள்ள முடிவதால் மற்றவர்களும் இவர்களின் பேச்சை ஆர்வத்தோடு கேட்டுச் சென்றனர். இவர்களுடன் நமதூர காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உடன் சென்றனர்.
சுப்பிரமணிய ஆதித்தன் பரப்புரை
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், திரு.சுப்பிரமணிய ஆதித்தன். வழக்கறிஞரான இவர், திருச்செந்தூரில் முன்னர் வழக்கறிஞர் பணியில் ஈடுப்பட்டு வந்தார்.
1977 ஆண்டு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில், ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு, அ.தி.மு.க வேட்பாளர் திரு. அமிர்தராஜிடம் சுமார் 800 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்தார்.
மேலும், அத்தேர்தலில் சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர், நமதூர் ஹாஜி எஸ்.செய்யது அஹமது மூன்றாம் இடத்திற்கு வந்தார். இது பழைய வரலாறு.
அத்தேர்தலுக்கு பின்னர், தூத்துக்குடிக்கு புலம் பெயர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன், கா.கா.தே.கா வழியாக காங்கிரஸில் இணைந்து இன்றுவரை அதில் பணியாற்றி வருகிறார்.
அண்மையில் நமதூரில் காங்கிரஸ் வேட்பாளர் அவர்களுக்கு ஆதரவாக வருகைதந்த அவர், முந்தைய இளமைமாறாத தோற்றப் பொலிவுடன், அக்காலத்திய உரையழகுடன் பரப்புரை செய்தது அனைவரையும் கவர்ந்தது.
நடைபெறும் இத்தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில், காங்கிரஸிற்கும் ஏதேனும் ஒருகட்சிக்கும் தான் போட்டி என அவர் நம்பிக்கையோடு குறிப்பிட்டார்.
இப்பேச்சு அவரது கட்சியினரை உற்சாகப்படுத்தியது. மற்றவர்களை புருவம் உயர்த்த வைத்தது. தேர்தல் முடிவுதான் அவரது நம்பிக்கை சரியா அல்லது தவறா என்பதை முடிவு செய்யும். பொறுத்திருந்து பார்ப்போம்.
நிலைப்படம் மற்றும் தகவல் : முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com