காயல்பட்டினம் அரிமாசங்கத்தின் மாதாந்திரகூட்டம் அரிமா M.S.M.மீராசாகிபு அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
சங்கத்தலைவர் எஸ்.எம்.எம்.சதக்கத்துல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அரிமா ஆளுநர் பி.ஜே.எம்.யேசுபாலன் அவர்கள் நமதூருக்கு அதிகாரப்பூர்வமாக வருகைதரும் விசயம் ஆலோசிக்கப்பட்டது.
ஆளுநரின் வருகையை முன்னிட்டு நமதூர்மக்கள் பயன்பெறும் வகையில், நலத்திட்ட உதவிகள் வழங்குவது என இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. ஆளுநரின் வருகைநிகழ்ச்சியை சிறப்பாக அமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வட்டாரத்தலைவர் டி.ஏ.எஸ். முஹம்மதுஅபூபக்கர், செயலர் எம்.எல்.சேக்னாலெப்பை, பொருளாளர் கே.அப்துல்ரஹ்மான், வி.எம்.எஸ்.எம்.அமீன், ஜெய்னுல்ஆப்தீன், எம்.ஏ. இம்ரான், ஜெ.லரீஃப், ஆர்.பி.சம்சுத்தீன், எம்.எஸ்.எம்.மீராசாகிபு மற்றும் பல அரிமாக்கள் பங்கேற்றார்கள்.
தகவல்: எம்.எல்.சேக்னாலெப்பை,
செயலர், அரிமாசங்கம், காயல்பட்டினம்.